136th KDB (135)- Arulmigu Valikolli Amman Thirukkovil, Parakkai, Agastheeswaram Taluk (Petty Devaswom)

kdb-1354அருள்மிகு வலிகொல்லி அம்மன் திருக்கோயில்

பறக்கை, அகஸ்தீஸ்வரம் தலுக்க


Location Map


Parakka Sub Group Devaswom

പറക്ക വലി കൊല്ലി അമ്മൻ ദേവസ്വം
( വലി= വേദന, കൊല്ലി= സംഹാരം)
பறக்கை வலி கொல்லி அம்மன் தேவஸ்தானம்

வலியும் வேதனையும் தீர வலிகொலியிடம் செல்லுங்கள் – பறக்கை

உண்மை சம்பவம்கொஞ்சம் சுவாரஸ்யமானதும் கூட, அதே சமயம், ஆயிரம் வண்ணக் கனவுகளுடன் வாழ்ந்த வாழ்வு சனப்பொழுதில் மாறி வாழமுடியாது தீராத வலியுடன் வாழ்வை முடிவு செய்த ஓரு குலமகளின் மரண சாித்திரம்.

ஆம் அதன் அடையாளமாக கன்னியாகுமரி மாவட்டம்,

பறக்கை என்னும் ஊரில் இன்றைக்கும் இருக்கிறது,வலிகொலி அம்மன் கோயில்.

வலிகொலி அம்மன் இல்லாமல் இந்தக் கதை இல்லை!

குறத்தியறை தலைநகராக கொண்டு ஆண்ட ஒரு குறுநிலத் தலைவன் காடராசன் , வேறு சாதி பெண்ணை விரும்பியதன் காரணமாகக் கொல்லப் பட்ட நிகழ்ச்சி வருகிறது.

(கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் இரவிபுதூரில் உள்ள காடராசன் கோவில் தொடர்பான வில்லிசைக் கதை உண்டு.)

அது மாதவனின் மாா்கழி மாதம் பனியும் கொஞ்சம் தென்றல் காற்றும் சேர்ந்து கொண்டதால்,அரண்மனையே குளிர்ந்து போய்க் கிடந்தது. சாளரங்கள் இறுகச் சாத்தியிருந்தாலும், எப்படியோ பனி உள்ளுக்குள் ஊடுருவத்தான் செய்தன. காடராசன் உத்தரத்தில் தொங்கும் அலங்கார விளக்கின் மேல் கட்டப்பட்டிருந்த சிறிய குருவிக்கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். கூட்டிலிருந்து குருவி வெளிவருவதும், மறுபடி உள்ளே அடைவதுமாக இவனுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது. அதுவும் குளிருக்கு நடுங்குகிறதோ என்று தோன்றியது காடராசனுக்கு.

மந்திரி, அரசனின் பார்வை போகிற திக்கைப் பார்த்து, அவன் குருவி குறித்து எதையோ யோசிக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டார். அவனுடைய தயாள குணத்தை அவர் அறிவார். ஆட்சி, அதிகாரம், ஏவல் செய்ய ஏராளமானவர்கள்… ஆனால், இம்மியளவுகூட காடராசனிடம் அகந்தைகூடி அவர் பார்த்ததில்லை. துடிப்பான இளம் அரசன், நீதி தவறாத பரிபாலனம் ஒன்றே அவன் லட்சியம்.

மந்திரி,அரசனுக்குஎதிரேஅமர்ந்திருந்தார்பக்கவாட்டில் இருந்த ஆசனங்களில் மூன்று ஜோதிடர்கள் ஓலைச்சுவடிகளைப் புரட்டுவதும், எதை யோகணக்கிடுவதுமாக இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் மூவரும் ஒருவரையொருவர் பார்த்து, கண் பார்வையிலேயே ஒரு முடிவுக்கு வந்ததைத் தலையசைப்பில் ஒப்புக்கொண்டார்கள். அவர்களில் வயதில் மூத்தவராகத் தோன்றியவர் தான் உரையாடலைத் தொடங்கினார்.

அரசே..! இந்தவருடம்உங்கள்பிறந்தநாள் சனிக்கிழமையில் வந்துவிட்டது. அது, தங்கள் ஜாதகத்துக்கு அத்தனை உத்தமமாகப் படவில்லை…’’“சுற்றி வளைத்துப் பேச வேண்டாம். ஜாதகப் பலன் எதுவாக இருந்தாலும், நேரடியாகச் சொல்லலாம். அச்சம் வேண்டாம்…’’

“ஜாதகப் பிரகாரம் உங்களுக்குக் கண்டம் இருக்கிறது. அந்தக் கண்டம்…’’

காடராசன் முதிய ஜோதிடரை விழித்துப் பார்த்தான். மற்றொரு ஜோதிடர் தொடர்ந்தார்… “மன்னா… அந்தக் கண்டம் சாதாரணமானதல்ல. அதனால் அரசர் பிரானின் உயிருக்கே ஆபத்து நேர வாய்ப்பிருக்கிறது…’’
இதைக் கேட்டு காடராசன் அவன் அமர்ந்திருந்த பிரமாண்டமான அறையே அதிரும்படிசிரித்தான்.

அவ்வளவுதானே…

ஜோதிடத்தில் இப்படி ஓர் ஆபத்து இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்குப்பரிகாரமும் சொல்லப்பட்டிருக்குமே!
உண்டு மன்னா! தங்கள் ஜாதகப்படி கண்டத்தைத் தீர்க்க வல்லவர் எம்பெருமான் நாராயணனே! தாங்கள் இன்னும் ஒரு வருடக் காலத்துக்குப் பல விஷ்ணு தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வருவதே ஷேமம்…’’

காடராசன் பதில் பேசவில்லை….,

மந்திரிக்கு ஜாடை காட்ட, அவர் ஜோதிடர்களுக்கு உரிய சன்மானத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்.

ஓரிரு நாள்களில், பொறுப்பைத் தன் நம்பிக்கைக்குரிய உறவினன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு, க்ஷேத்திராடனத்துக்குக் கிளம்பிவிட்டான்.

பயணம் மனிதனுக்குப் பல வாசல்களைத் திறந்துவைத்துவிடும் அற்புதமான அனுபவம். `உலகம் மிகப்பெரிது; நீ துரும்பிலும் சிறியவன்’ என நம்மை நாமே உணர்ந்துகொள்ள இறைவன் வகுத்து வைத்திருக்கும் ஏற்பாடு; சக மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் கற்றுத்தரும் பாடசாலை;

உலகளந்த பெருமாளை சதா மனதில் மனனம் செய்துகொண்டே இருக்கப் பழக்கும் பிரம்ம வித்தை!
காடராசனுக்கு அந்தப் பயணம் சலிப்பைத் தரவில்லை.

கோயில்களோ, அவற்றில் திரும்பத் திரும்பப் பார்த்த எம்பெருமான் நாராயணனின் திருவுருவோ திகட்டிப் போய்விடவில்லை.

இன்னும் இன்னும் என அவன் மனம் ஏக்கம் கொண்டது. பெருமாளின் அடுத்த கோயிலில் அவன் உரு எப்படி இருக்குமோ… நின்ற திருக் கோலமா, சயனத் திருக்கோலமா… மனம் கோயிலைக் காண்பதற்குள்ளாகவே அரற்ற ஆரம்பித்திருக்கும்.

அந்தப் பரந்தாமனுக்கு, பக்தனுக்குத் தன் மேலுள்ள ஈர்ப்பு இனிப்பாகத்தான் இருந்தது. ஆயினும், காடராசனுக்கு லௌகீக வாழ்க்கையை உணர்த்தும் வேலையும், அதோடு புரிவதற்கு ஒரு லீலையும் இறைவனுக்குக் காத்திருந்தது.
குறத்தியறை மன்னனால் காடராசனால் பறக்கைக்கு ஏற்பட்டது வலி…..

இறுதிப் பயணமாக வந்து சோ்ந்த ஊர் பறக்கை.

அங்கே வருவோருக்கு வசந்தம் பல நல்கும் மதுசூதனப்பெருமாள் கோயில் கொண்டிருந்தார். தித்திக்கத் தித்திக்கப் பெருமாள் சேவையைக் கண்டபின், தான் தங்கியிருந்த இடத்துக்கு வந்தான் காடராசன்.

அங்கே அவனின் ஆஸ்தான ஜோதிடர்கள் காத்திருந்தார்கள். அடுத்த நாள் அவன் பிறந்த தினம் என்பதை நினைவூட்டினார்கள்.

வழிபாடு

தன்னுடைய பிறந்த நாளில் மதுசூதனப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகளைச் செய்தான். நெஞ்சுருக பெருமாளை வேண்டி நின்றான்.

பிறகு பறக்கை ஊரை வலம் வந்தான். சிறிய ஊர். சுத்தமான தெருக்கள். வெள்ளந்தியான மனிதர்கள். அவன் வடக்கு தெருவுக்கு வந்தபோது அவனுக்காக ஓர் அதிசயம் காத்திருந்தது..
.
அழகு ஆபத்தா ?

இளம் பெண் வடிவில்! இரு பக்கமும் திண்ணைகளைக் கொண்ட அழகான வீடு. வாசலில் பெரிய மாக்கோலம்; அதன் மேல் பசுஞ்சாணத்தில் அந்தப் பேரழகி பூசணிப் பூவைச் செருகிக்கொண்டிருந்தாள்.

மயில்போல வளைந்த நேர்த்தியான உடல். மின்னும் கண்கள். வானத்து அப்சரஸ் கண் முன் வந்துநின்றது போல் இருந்தது. காடராசன் தன் நிலைகொள்ளாமல் அப்படியே நின்றுவிட்டான்.

அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றியது. பித்தம் அவன் தலைக்கேரியது
அந்தப் பெண்ணோ, தெருவில் யாரையும் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.தான் வடித்த கோலத்தைப் பார்த்தாள். அதன் மத்தியில் பூசணிப்பூ நேர்த்தியாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதில் தனக்குத் தானே திருப்தி கொண்ட வளாகத் தலையை அசைத்துக்கொண்டாள். திரும்பி வீட்டுக்குள் போனாள்.

`இவள் யார்… இவளுடைய பூர்வீகம், தாய்-தகப்பன் யார்… இவள் பெயர் என்ன?’ – யாரிடமாவது கேட்க வேண்டும் என மனம் துடித்தது. ஆனால், தயக்கம் தடுத்தது.

காடராசன் தன்னுடன் வந்த பரிவாரத்தைப் பார்த்தான். தலைவனாக இருந்தவனிடம் ஜாடை காட்டினான். பரிவாரம், அரசனைத் தாண்டி முன்னே சென்றது.

அரசன் தன் இடுப்பில் இருந்த பட்டுக் கைக்குட்டையை எடுத்தான். யாராவது பார்க்கிறார்களா என அவதானித்தான். வீட்டின் மேற்புறத்தில் இருந்த எரவாணத்தில் துணியைச் செருகினான். அந்தப் பெண்ணை நினைத்துப் பெருமூச்சு விட்டபடி, தன் பரிவாரத்தைத் தொடர்ந்தான்.

தான் முகாம் இட்டிருந்த இடத்துக்கு வந்ததும் முதல் வேலையாக மந்திரியை அழைத்தான். பறக்கை ஊரின் வடக்கு வீதியில் தான் பார்த்த அழகியைப் பற்றிச் சொன்னான். “மந்திரியாரே! அந்தப் பெண் இல்லாமல் என்னால் வாழ முடியும் என்று தோன்றவில்லை. அவள் யார் என விசாரிப்பீரா? எனக்காக அவளின் தந்தையிடம் பேசுவீர்களா?’’

உடன் இருந்த இத்தனை ஆண்டுகளில் இப்படி இறைஞ்சும் குரலில் காடராசன் எப்போதும் பேசியதில்லை. அந்தப் பெண் அரசனின் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டாள் என்பது மந்திரிக் குப் புரிந்தது. தலையசைத்த மந்திரி உடனே கிளம்பினார்.

வடக்கு வீதிக்கு வந்தார். அரசன் அடையாளம் சொன்ன வீட்டை எளிதாக அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. அரசனின் பட்டுக் கைக்குட்டை வீட்டைச் சுட்டிக்காட்டியது. வாசலில் நின்று குரல் கொடுத்தார். வெளியே வந்து வரவேற்றவர் பெண்ணின் தந்தை.

மந்திரி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த வீட்டின் உரிமையாளர், மந்திரியை உபசரித்தார். சிறிது நேரத்தில் மந்திரி காடராசன் பற்றியும் அவனின் ஆசையையும் சொன்னார்.

பெண்ணின் தந்தை மற்றும் அண்ணண் தம்பி ஐவரால் எதுவும் பேச முடியவில்லை. அதே நேரத்தில் உடன்படவும் முடியவில்லை. அரசன் வேறு குலம், தான் வேறு குலம் என்பது பெரும் உறுத்தலாக இருந்தது.

தன் சாதிகாரர்கள் நிச்சயம் இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதும் புரிந்தது. வந்திருப்பவர் ஒரு நாட்டின் மந்திரி. அதுவும் தன் அரசனுக்காகப் பெண் கேட்டு வந்திருக்கிறார்.பெண்ணின் தந்தைக்கு நாக்கு வரண்டது,வானம் இருண்டு தலை சுற்றியது.

மந்திரி, அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
நாளை இரவு அரசா் இங்கு வருவாா் என அதிகார தோணியில் ஆணையிட்டு சென்றுவிட்டாா்.

சுற்றமும் குற்றமும்

மந்திரி ,அரசனிடம் போனார். பெண்ணின் தந்தை சம்மதம் தொிவித்ததாக சொன்னார். அதன் பிறகு மளமளவென வேலைகள் நடந்தன. விஷயம் மெள்ள மெள்ள ஊர் முழுக்கப் பரவியது.

அடுத்த நாளே பெண்ணின் உறவினர்கள், அவள் வீட்டின் முன்னால் திரண்டு வந்து நின்றார்கள். அத்தனை பேரும் படபடப்புடன் இருந்தார்கள்;

அனைவருக்குள்ளும் கோபம் சிறு கொழுந்தாக உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்தது. கோபமும் பதற்றமும் இருக்கும் இடத்தில், அமைதி இருக்காது; பேச்சு தடிக்கும்; தான் சொல்வதை எதிராளி ஏற்க வேண்டும் என்கிற முரட்டுத்தனம் எட்டிப் பார்க்கும்.அன்றைக்கு அந்தப் பெண்ணின் வீட்டில் அதுதான் நடந்தது.

“இங்கே பார்! வேறு ஜாதிக்காரனுடன் உன் பெண்ணுக்குத் திருமணம் நடந்தால், உன்னை சாதியிலிருந்து ஒதுக்கி வைத்து விடுவோம்’’ – ஒருவர் விடாமல் பயமுறுத்தினார்கள். அப்படி ஒன்று நடந்தால் சொந்த மண்ணில் வாழ முடியாது. பிறகு பிறந்த மண்ணைவிட்டு வேறு எங்கேதான் போவது? வந்தவர்களே ஓர் ஆலோசனையையும் சொன்னார்கள்…

“அரசனையும் பகைத்துக்கொள்ள முடியாது. பேசாமல் உன் மகளை அழைத்துக் கொண்டு போய் விடுங்கள்,அல்லது குலமகளை மறைத்து வைத்துவிடுங்கள் ,மன்னன் செல்லும் வரை ,

வேறு உபாயம் தற்போது இல்லை என்றனா்.பெண்ணின் தந்தைக்கு. அதுதான் சரி எனப் பட்டது.

விதியா ? காலத்தின் சதியா ?

மாலையானது, மதியும் மயங்கியது
விசித்திரமான எண்ணம்,வீட்டில் நெல் மணிகளை சேகரித்து வைக்கும்,நெற் குதிாின் உள்புறம் தங்கள் குலவிளக்கை அடைத்து வைக்க முடிவு செய்தனா்.தங்கள் திட்டத்தை குமரியிடம் கூறினா்,

அவளோ வேண்டாம் அண்ணா,பயமாக இருக்கிறது,பூச்சிகள் அதில் உண்டு,பூரான்கள் பல உண்டு,மூச்சடைக்கப் போகின்றது,முழு நிலவும் மறைந்துவிடும்,தலையேசுற்றுகிறது,

அண்ணா,தந்தையே,,,குதிாினுள் இருக்கும் பொழுது,தாகமும் தவியாய் தவிக்குமே தண்ணீருக்கு என்ன செய்வேன் என பலவாறுபுலம்பி மயங்கி சரிந்தாள்.

குமரி அவள் மயங்கிசரிந்ததும், அவளை தூக்கி நெற்குதிரினுள் வைத்துவிட்டு தாகம் தீா்க்க மூக்கு போன்ற பகுதிகொண்ட பாத்திரம் கெண்டியையும் போட்டு ,நெற்குதிரை மூடிவிட்டனா்.

சிறிது நேரத்தில்,மயக்கம் தெளிந்தது,கண்விழித்து பார்த்தாள் குமரி அவள்,..சுற்றிலும் இருட்டு,வாய்விட்டு கதறினாள்,கூச்சலிட்டாள்,வீண் முயற்சியாகியது.தான் பெண்ணாக பிறந்தது பாவமா என அவள் வாய்விட்டு அலறினாள். வயிறு எரிந்து சாபமிட்டாள்…

“பாவி… இந்தக் காடராசனால் அல்லவா இந்தத் துன்பம் எனக்கு வந்தது? அவன் அழிந்து போகட்டும். திருமணமான மூன்றாம் நாளே மனைவியுடன் சேர்ந்து சாகட்டும். என் தந்தையின் குடும்பத்தில் ஏழு தலைமுறைக்குப் பெண் வாரிசு அற்றுப் போகட்டும்..
.’’
அந்தோ பாிதாபம் ,நெற் குதிாின் உள் மூச்சு திணறியது, நெற்குதிாின் உள் அந்தக் கன்னிப்பெண் சிவனிடம் வரம் பெற்று தெய்வமானாள்.

தன்னையே வதைத்துக்கொண்டதால் அந்தப் பெண் `வலிய கொல்லி’ என அழைக்கப்பட்டாள்.

மறு அவதாரம்

மன்னனும் பாிவாரங்களும் குமாி பெண்ணை காணாது தம் இருப்பிடம் திரும்பினா்.

மன்னன் சென்றதும், தந்தையுடன் அண்ணண்மாா்கள் நெற்குதிரை திறந்தனா்,

அங்கு தங்கள் குலவிளக்கு மரணித்தை கண்டு அழுதனா்,புரண்டனா் பின்பு தங்கையின் உடலை ஊாின் வடக்கு பகுதியின் குளத்தின் அருகில் ஆழமான குழி தோண்டி திருஉடலுடன் ,தாகம் தீா்க்க மூக்கு போன்ற பகுதிகொண்ட பாத்திரம் கெண்டியையும் போட்டு புதைத்துவிட் டு அக்குடும்பம் ஊரைவிட்டு பக்கத்து ஊா்களில் குடிபெயா்ந்தனா்.

மறுநாள் இரவு மன்னனின் கனவில் சென்று கொலை பலிவாங்குவேன் என்றுரைத்தாள்,

பின் தன் குடும்பத்தாரின் கனவில் சென்று தாகமாயா இருக்கிறது தண்ணீா் தாருங்கள் என கூறி மறைந்துவிட்டாள்.

அண்ணன்மாா்கள் தங்கைபாசம் தாங்காது உடனே ஓட்டமும் நடையுமாக வந்து தங்கையை புதைத்த இடத்தை பாா்த்தனா் அங்கு அவா்கள் கண்ட காட்சி அவா்களை மட்டுமல்ல,எல்லோா் உயிரிலும் ஊடுருவும் உயிாினை ஓரு நொடி கரைக்கும் நிகழ்ச்சியாக அது அமைந்தது,
குமாியின் ஓருகை மட்டும் கெண்டியை தாங்கிகொண்டுவெளியே நீண்டு இருந்தது.

உயிா் பலிக்கு பாிகாரம்

மன்னன் காடராசன் மனம் நடுங்கி,நம்பூதிகளை அழைத்து பரிகார முறை செய்து பாவத்திலிருந்து தப்பிக்க வழி கேட்டான்.நம்பூதிகள் காலக் கணக்கை ஆய்வு செய்து சோழியை உருட்டினா் .
.
அங்கு குமாிபெண் ஆன்மா ஆங்காரவள்ளியாக காளியுடன் குடி கொண்டு இருப்பது கண்டு அஞ்சி குலை நடுங்கினா்..

இனி தப்பிக்க ஏது உபாயமன காளி அன்னையின் பாதாரவிந்தங்களிளேயே சரணடைந்தனா்..

ஆலயமானது

வலி கொலியி குமாி பெண்ணின் ஆங்காரத்தை தணிக்க அவளது உடலின் மேல் காளி அன்னையை பிரதிஷ்டை செய்து,ராஜ கோபுரத்துடன் ஆலயம் அமைத்தனா்.

இதை, `வள்ளீரம்மன் கோயில்’ என்றும் ஊர் மக்கள் அழைக்கிறார்கள்.

இந்தப் பெண் தெய்வத்தைக் காளியின் அம்சமாகவே கருதுகிறார்கள். இந்தத் தெய்வத்துக்காக எடுக்கப்படும் விழாவை `காளிவூட்டு’ என்கிறார்கள்.

வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தக் கோயில் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் பைரவர் நின்றகோலமாக அருள்கிறார். அற்புதமான சிற்ப வேலைப்பாடு.

காளி நிமிர்ந்து எட்டு கரங்களுடன் இருக்கிறாள். காளி அன்னை சிற்பத்தின் வேலைப்பாடு மிகவும் நோ்த்தியானது,இது கன்னியாகுமாி மாவட்டத்தில் வேறு எங்கும் கான முடியாத அழகிய கலை நயத்துடனும் அமைந்துள்ளது,

அன்னையின் தன் இடது காலின் கீழ் பகுதியில் எருமை தலையை மிதித்தவாரும் வலது காலை மடித்து சூாிய கலையில் இவ்வுலகின் ஆக்கலும்,அழித்தலும் நானே என்று அமா்ந்து இருக்கிறாள்.

காளி அன்னை சிற்பத்தின் கீழ் உள்ள சிறு பலிபீடம் உள்ளது, அதுவே அப்பெண்ணின் உடலின் உடலை தாங்கிய இடமாக கருதுவா்,காளி அன்னைக்கு செய்யப்படும் வழிபாடு அனைத்தும் அந்த சிறு பலிபீடத்திற்க்கும் செய்யப்படும். காளியின் வேதாள வாகனம் கல் உருவாக பிராகாரத்தில் இருக்கிறது.

ராஜகோபுரத்தின் உட்புர பகுதி அம்மனின் சக்தி நிலையை சாந்த படுத்த மகா மேரு வடிவில் தாந்திாிக முறையில் அமைத்துள்ளனா்.இங்கு செய்யப்படும் ஆங்காரவல்லி சிறப்பு பூஜை மிகுந்த சக்தி வாய்ந்தது.

இந்தக் கோயி லுக்கு தினசரி பூஜை உண்டு. பங்குனி அல்லது சித்திரை மாதம் `காளிவூட்டு’ (விழா) நடக்கிறது. இந்த விழாவில் காளிக்கு சைவ, அசைவ உணவுகளைப் படையலாகப் படைக் கிறார்கள்.

காளி, கலைமான் வாகனத்தில் வலம் வரும்போது மது பொங்கும் நிகழ்ச்சி நடக்கும். `குறுவை’ என்ற நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த இயற்கை மது உருவாக்கும் தொழில்நுட்பம்கூட இப்போது செய்தியாகத்தான் இருக்கிறது.

வலிகொலி அம்மன் காளியின் அவதாரமாகவே கருதப்படுகிறாள்.

பேய் பிசாசு போன்ற தீய சக்திகளிடமிருந்து காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.
பெண்ணின் மகப்பேறு தொடர்பான நோய், சிக்கல், பயம் போன்றவை நீங்க இந்தப் பெண் தெய்வத்துக்கு நேர்ந்துகொண்டால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை காலம் காலமாகத் தொடர்கிறது.

இன்றும் பறக்கை சுற்றுவட்டாரத்தில் உள்ள மருங்கூா்,இரவிபுதூா், திருவஞ்சிநல்லூா் மற்றும் பிறபகுதியில் உள்ள விவசாய பெருங்குடியானவா்களின் சில குடும்பங்கள் பறக்கையை பூா்வீகமாக கொண்டு நான்கு தலைமுறைக்கு முன்பே குடிபெயா்ந்துள்ளனா்.

மன்னா் காடராசா தன் பெண்பாவம் கரைவதற்கு இரவிபுதூாில் காடான்குளமும் ,மற்றும் ,அம்மன் ஆபத்துக்காத்தவள் திருமஞ்சனம்செய்ய வெள்ளாி நீா் ஊற்றும் வெட்டினாா்,

இரவிபுதூா் தம்புரான்சுவாமி கோவில் உள்ள காடராசனின் ஓவியம் மேலும் மேற்கண்ட ஆதாரங்கள் வலிகொலி அம்மன் கதை ,கதை அல்ல நிஜம் என்பதேயாகும்.

Author : Sri.Murugu Subramoniam from Marungoor.

Article shared by Sir.Janarthanan from Parakkai